கைவிடப்பட்ட கடிதங்கள்

கவிதை

- Advertisement -

அன்பிற்குரிய..!
பாசத்திற்குரிய..!!
மதிப்பிற்குரிய..!!!
என எழுத துவங்கி
நட்புடன்..!
பிரியமுடன்…!!
நீங்கா நினைவுடன்.!!!
என முற்றுபெற்ற
எத்தனையோ
கடிதங்கள்
காலாவதியாகி
கிடக்கின்றன
உரிய எனும் இடத்திற்கு
உரியவரில்லாமல்.

தமிழ் வாணன்
தமிழ் வாணன்https://minkirukkal.com/author/tamilvanan/
மகாதேவப்பட்டிணம்,எனும் கிராமத்தில் விவசாய குடும்பத்தை பின்புலமாக கொண்ட நான். இயந்திரவியலில் இளங்கலை பட்டம் பெற்று .தற்போது கப்பல் சார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருக்கிறேன். Msg: நடிப்பு,கவிதை,கதை எழுதுவதில் ஆர்வமுண்டு. அவ்வப்போது அதற்கான முயற்சியையும் செய்து வருகிறேன்.

2 COMMENTS

  1. உரிய எனும் இடத்திற்கு
    உரியவரில்லாமல் இருப்பதை…
    உரியவர் யார் என்னும் இடத்தை நிரப்பும் உரியவரே நீர் தான் நண்பா?… அது விரைவில் நடக்க நமக்கு உரியவரான கடவுளை பிரார்த்திக்கிறேன்??

  2. ரசித்தேன்
    புதுமையாய் உங்கள் கவிதை
    வாழ்த்துக்கள் நண்பா.

    வசந்ததீபன்

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -