சகடக் கவிதைகள் – 2

- Advertisement -

இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்

எல்லாவற்றையும் சேர்த்து

என்னுடையது என்றேன் நான்..

என்னையும் சேர்த்து

தன்னுடையது என்றது மரணம்.

————————————————————–

நான் விரும்பியவை

தொலைவில் இருப்பதாலேயே

அதிகம் விரும்புகிறேன்..

————————————————————–

வார்த்தைகளைக் கொண்டு

முடிக்க முடியாத என் கவிதைகளை

அன்பால் நிரப்புகிறேன்..

————————————————————–

மரணத்தைக் கண்டு

அஞ்சும் என்னை

உதிரும் இலையின் மெளனம்

கேலி பேசுகிறது

ராகவ் மிர்தாத்
ராகவ் மிர்தாத்http://www.rakavmirdath.com
மனித உளவியலையே மாற்றக்கூடிய சக்தி படைத்த சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத பங்காற்ற வேண்டுமென்ற தணியாத கலைத்தாகத்தால் உந்தப்பட்ட படைப்பாளி, இயக்குனர், எழுத்தாளர்.இவரது படைப்புகள் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் காணக்கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.தேசிய விருது பெற்ற “பாரம்" படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தா.இவருடைய “மிருணா” என்கிற குறும்படம் ரீகல்டாக்கீஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -