பெருநகர் கனவுகள் – 1

நீள் இரவொன்றின் தனிமை

- Advertisement -

நீள் இரவொன்றின் தனிமை

திட்டமிடாமல்
பாகுபாடில்லாமல்
விருப்பு வெறுப்பில்லாமல்
மழை நகரத்தைச்
சுத்தப்படுத்தி விடுகிறது.

ஒரு மழை இரவில்
மொத்தக் காட்சிகளும்
தம்மைத் தாம்
கழுவிக் கொண்டு
புதிதாய் உருவாகின்றன.

அதுவரை
பல முகங்களைக்
கொண்டிருக்கும் நகரம்
மழை இரவில்
அனைத்தையும்
ஒதுக்கிவிட்டு
தலை நனைக்கிறது.

கடைசியாக
ஒரு தள்ளு வண்டிக்காரரின்
அரை தூக்கத்தில்
கரைந்து மௌனிக்கிறது
மழையின்
கடைசித் துளி.

கே.பாலமுருகன்
கே.பாலமுருகன்https://minkirukkal.com/author/kbalamurugan/
மலேசிய எழுத்தாளர், தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். இதுவரை இலக்கியம் சார்ந்து 15 நூல்களும், கல்வி ஆய்வியல் சார்ந்து 18 நூல்களும் இயற்றியுள்ளார். தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் இலக்கியத்திற்கான கரிகாற் சோழன் விருது, அன்னை வேளாங்கன்னி கலைக் கல்லூரியின் தனி நாயகர் தமிழ் நாயகர் விருது, குறிஞ்சி கபிலர் இயக்கத்தின் பாரதி விருது, மலேசியப் பல்கலைக்கழகத்தின் எம்.ஏ.இளஞ்செல்வன் விருது, சி.கமலநாதன் விருது, குடியரசு தின விருது என இலக்கியத்திலும் கலை படைப்புகளிலும் இதுவரை 25 சர்வதேச விருதுகள் பெற்றுள்ளார். மலேசியாவில் பலகலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கான சிறுகதைப் பயிற்றுநராக வெண்பலகை எனும் திட்டத்தில் செயலாற்றி வருகிறார். அதோடுமட்டுமல்லாமல் சிறுவர் நாவல்கள், சிறுவர் சிறுகதைகள், சிறுவர்களுக்கான படைப்பிலக்கியத் தளங்களை உருவாக்கி அடுத்த தலைமுறை மாணவர்களுக்கும் வழிகாட்டி வருகிறார். http://balamurugan.org என்கிற தன் அகப்பக்கத்தில் எழுதியும் வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -