யமுனா வீடு – 25

தொடர் கவிதை

- Advertisement -

பரிசுத்தமான அன்பிலிருக்கிறது
நம்மை அடையாளம் காட்டிடும் ஒரு சொல்
யமுனாவிடமிருக்கிறது

யமுனா
சொற்களின் வழியே
மகிழ்ந்த கனவைப்போல
உடல் முழுமைக்கும்
படர்ந்துவிடுகிறாள்

நமக்குள்ளிருக்கும் கவலைகளை
சொல்லக்கேட்டு
உப்பு நீரை அள்ளிப்பருகி ஒரு கடலை இப்படிக் கடக்கவேண்டும் என்கிறாள்.

உடைந்து அழும்
நம்முடைய கண்ணீரைத் துடைக்க
வாழ்வின் முழுமைக்குமான சொற்கள்
யமுனாவிடமிருந்தும்
வலிநிவாரணியாக
கைகளைகப் பற்றிக்கொண்டு
நம்மை மீளச்செய்யும்
ஒரு புன்னகையைத் தருகிறாள்

வானத்தை அளந்திடும் ஒரு பறவையைப்போல
யமுனாவின் நேசத்தில்
தொலைந்துபோன நாட்களை மீட்டெடுக்கிறேன்
சட்டென்று பெய்யும்
மழையைப்போன்றதொரு அன்பு

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -