விருட்சம்

- Advertisement -

என் வனப்பினை நான்
ரசிக்கத் துவங்கிய நாளில்
பயமும் கூடவே
தொற்றிக்கொண்டது
பார்ப்பவர்கள் எல்லாம்
என்னை அபகரிக்கத் துவங்கினார்கள்
அஸ்திரங்களாக
கற்களை வீசி எறிந்தார்கள்
அபகரித்த என்னை
ரசித்து புசித்து
வீசி எறிந்தார்கள்
வீதியிலே
விழுந்தேன்
மண்ணில் புரண்டேன்
தட்டுத் தடுமாறி தானே
எழுந்து நிற்கிறேன்
மீண்டும் இதோ
என்முன்னே நிற்கிறான்
என்மீது கல் எரிந்தவனின்
மகன்
அவனையும் மன்னித்து
அவனுக்கு என்னால்
ஆனவற்றை வழங்குவேன்.

~மாமரம்.

தமிழ் வாணன்
தமிழ் வாணன்https://minkirukkal.com/author/tamilvanan/
மகாதேவப்பட்டிணம்,எனும் கிராமத்தில் விவசாய குடும்பத்தை பின்புலமாக கொண்ட நான். இயந்திரவியலில் இளங்கலை பட்டம் பெற்று .தற்போது கப்பல் சார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருக்கிறேன். Msg: நடிப்பு,கவிதை,கதை எழுதுவதில் ஆர்வமுண்டு. அவ்வப்போது அதற்கான முயற்சியையும் செய்து வருகிறேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -